விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ் போன்ற படங்களில் நடித்தவர் மெஹ்ரீன் பிர்சடா. தற்போது தெலுங்கில் எப் 3 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இவருக்கும், பவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கொரோனா பிரச்னையால் திருமண தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், நிச்சயதார்த்தம் நடைபெற்று மூன்று மாதத்திற்கு பிறகு பவ்யாவை பிரிவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார் மெஹ்ரீன் பிர்சடா.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது : நானும், பாவ்யாவும் பிரிகிறோம். எங்களுக்கு நடந்த நிச்சயதார்த்தம் ரத்தாகிறது. எங்களின் திருமணமும் நடக்காது. இருவரின் நலன் கருதி இருவரும் சேர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். இனி பவ்யா அவரது குடும்பத்தினர் எந்த தொடர்பும் இல்லை. இனி வழக்கமான என் பணிகளை தொடர்வேன். சினிமாவில் தொடர்ந்து நல்ல படங்களை கொடுப்பேன். என் தனிப்பட்ட சுதந்திரத்தை அனைவரும் மதிப்பீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.