துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட அவர் உயர் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன் பின்னர் ஆண்டு தோறும் அமெரிக்காவில் உள்ள மயோ மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்வார். அதன்படி இந்த ஆண்டு மருத்துவ பரிசோதனைக்காக கடந்த19ம் தேதி அமெரிக்கா சென்றார். ஏற்கெனவே அமெரிக்காவில் இருக்கும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், அவரோடு இணைந்து கொண்டார்.
நேற்று ரஜினிக்கு மயோ மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடந்தது. இந்த சோதனை முடிந்து ரஜினி வெளிவரும் காட்சிகள் இணைய தளத்தில் புகைப்படங்களாக பரவியது. ரஜினியின் உடல்நிலை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கிறது. இன்னும் 3 வாரங்கள் வரை மருத்துவ கண்காணிப்பில் ஓய்வெடுத்து விட்டு அதன் பிறகு அவர் சென்னை திரும்புகிறார்.