பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நெல்சன் திலீப்குமார் இயக்கும் தனது 65ஆவது படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடன் பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் விரைவில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்நிலையில், விஜய் 65ஆவது படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்தநாளுக்கு முந்தின நாளான ஜூன் 21-ந்தேதி மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் சோசியல் மீடியாவில் இப்போதே பரபரப்பை ஆரம்பித்து விட்ட விஜய் ரசிகர்கள், இதுவரை விஜய் நடித்துள்ள 64 படங்களின் போட்டோக்களை வைத்து ஒரு ஸ்பெசல் போஸ்டரை சோசியல் மீடியாவில் டிரண்டிங் செய்கின்றனர்.
இதுஒருபுறம் இருக்க விஜய்யின் அரசியல் என்டரி குறித்த இன்னொரு போஸ்டரையும் வெளியிட்டு மேலும் பரபரப்பு கூட்டி வருகின்றனர் ரசிகர்கள். திண்டுக்கல் முழுதும் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், முதல்வர் ஸ்டாலின் நடிகர் விஜய்க்கு செங்கோல் வழங்குவது போன்ற புகைப்படமும், ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட, தம்பி வா; தலைமை ஏற்க வா என்று அழைக்கும் விதமான வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தி.மு.க.,வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.