பென்ஸ் டைட்டில் கேரக்டரில் வில்லனாக நடிக்கும் நிவின்பாலி | பிளாஷ்பேக் : அன்று எம்.ஜி.ஆரை விட அழகான ஹீரோ | லைகாவிற்கு ரூ.21.29 கோடியை வட்டியுடன் செலுத்த விஷாலுக்கு ஐகோர்ட் உத்தரவு | வில்லன் ஆன ஒளிப்பதிவாளர் | ஆண்ட்ரியா பட வழக்கு: தணிக்கை குழுவிற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு | நிர்வாகிகள் பதவி காலம் நீட்டிப்பு ஏன்? கோர்ட்டில் விஷால் விளக்கம் | ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் |
கமலின் திரையுலக பயணத்திலேயே அவருக்கு மகுடம் சூட்டிய படமென்றால் அவர் பத்து வேடங்களில் நடித்து, வெளியான தசாவதாரம் படம் தான். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வெளியாகி பதிமூன்று ஆண்டுகளை தொட்ட நிலையில் இந்த பட உருவாக்கம் குறித்து கமல் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருந்தார். இதற்கு ரசிகர்களை விட, அதிக அளவு ஆர்வம் காட்டி பல திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அந்தவகையில் நேரம், பிரேமம் ஆகிய படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியதுடன், கமலுக்கு ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பதிவில், "கமல்ஹாசன் சார், திரைப்பட இயக்கத்தில் உங்களுடைய தசாவதாரம் படம் ஒரு பிஎச்டி என்றால், அதற்கு முன்பு வெளியான மைக்கேல் மதன காமராஜன் படம் ஒரு டிகிரி படிப்பு போல, அந்தப் படத்தையும் எப்படி படமாக்கினார்கள் என எங்களுக்கு சொல்ல முடியுமா என்று கோரிக்கை வைத்துள்ளார் அல்போன்ஸ் புத்திரன்
தசாவதாரம் படத்தில் நடிப்பதற்கு முன்பாக கமல் அதிகபட்சமாக நான்கு வேடங்களில் நடித்திருந்த படம் தான் மைக்கேல் மதன காமராஜன் 90களில் வெளியான இந்த படத்தை இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார். நான்கு கமல்களையும் ஒரே காட்சியில் கொண்டு வந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தார்கள் கமல்ஹாசனும், இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவும் என்பது குறிப்பிடத்தக்கது.