'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் |
இந்தியன் 2 பட விவகாரத்தில் அப்படத்தை முடித்துக் கொடுப்பதற்கு முன்பு டைரக்டர் ஷங்கர் வேறு படம் இயக்கும் பணிகளில் இறங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது. அந்த வழக்கு குறித்த விசாரணை நிலுவையில் இருக்கிறது.
இதற்கிடையே தெலுங்கில் தில் ராஜூ தயாரிப்பில் ராம் சரண் நடிக்கும் பட வேலைகளில் ஷங்கர் ஈடுபட்டிருப்பதால் தற்போது ஐதராபாத் நீதிமன்றத்திலும் ஷங்கர் படம் இயக்குவதற்கு எதிராக இன்னொரு வழக்கைத் தொடர்ந்துள்ளது லைகா நிறுவனம்.
இதுகுறித்து டைரக்டர் ஷங்கரின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்தியன்-2 பட சம்பந்தமான வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதாக ஒரு புகார் அளித்திருக்கிறார்.
இதையடுத்து, லைகா நிறுவனம் சார்பிலும் நிலுவையில் உள்ள வழக்கை தள்ளி வைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதியோ, ஏற்கனவே நிலுவையில் இருக்கும் தடை கோரிய வழக்கின் விசாரணையில் தீர்வு கண்ட பிறகுதான் மேல்முறையீட்டு விசாரணைக்கு எடுக்க முடியும் என்று சொல்லிவழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்க உத்தரவிட்டுள்ளார்.