2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் |
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ் திரைப்படத் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பொருளாளர் தியாகராஜன் அனுப்பியுள்ள அறிக்கையின் சுருக்கம்: திரைத்துறையில் நிலவும் பல்வேறு பிரச்சனையால் தற்போது 10 சதவீதம் மட்டுமே லாபம் பெறுகிறோம். ஆண்டுதோறும் சினிமா பற்றால் 70 சதவீதத்தினர் சினிமா நோக்கி வருகின்றனர். ஆனால் அவர்களில் 90 சதவீதத்தினர் தோல்வியையே சந்திக்கின்றனர்.
மூலதனத்தை மீட்பதில் கடினமாக உள்ள சூழலில், 2021-22 நிதியாண்டில் 194-ஜெ பிரிவின் கீழ், ஆதாய உரிமையில் 10 சதவீதம் வருமானவரி பிடித்தம் (டி.டி.எஸ்) செய்ய உத்தரவிட்டுள்ளது பேரிடியாக உள்ளது. பலர் தோல்வியை சந்திப்பதால், வருமானவரி பிடித்தத்தை உரிமைகோரி எந்த பயனும் இல்லை. திரையுலகம் மீண்டெழும் வரை 10 சதவீதத்திற்கு பதில் 2 சதவீதம் மட்டுமே வரிப்பிடித்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கோரியுள்ளார்.