நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்கள், நடிகைகள் முன்பெல்லாம் டிவிக்களில் பேட்டி கொடுக்க மட்டும் தான் செல்வார்கள். அவர்களில் யாரையாவது டிவி நிகழ்ச்சியைத் தொகுக்கவோ, டிவி தொடர்களில் நடிக்கவோ அழைத்தால் அவ்வளவு கோபப்படுவார்கள்.
சினிமாவில் மார்க்கெட்டை இழந்தவர்கள் தான் டிவி பக்கம் செல்வார்கள் என்ற ஒரு இமேஜ் இருந்ததே அதற்குக் காரணம். ஆனால், போகப் போக அந்த நிலை மாறியது. கமல்ஹாசன், சரத்குமார், சூர்யா, ஆர்யா, அரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ், விஷால், விஜய் சேதுபதி என பலரும் டிவி பக்கம் பெரிய ஷோக்களை தொகுத்து வழங்கினார்கள்.
விஜய் சேதுபதி அடுத்து 'மாஸ்டர் செப்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியை கன்னடத்தில் 'நான் ஈ' சுதீப்பும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்க உள்ளார்களாம். தமன்னா இதுவரை எந்த ஒரு டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியதில்லை. முதல் முறையாக இந்த 'மாஸ்டர் செப்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார். இதற்காக அவருக்கு மிகப் பெரும் தொகை சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.