பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
திரையுலகில் முன்னணியில் உள்ள நடிகர்கள், நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள பல ரசிகர்களுக்கு ஒரு ஆர்வம் இருக்கும். ஒரு காலத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்கியதையே பெரிதாகப் பேசிய ஊர் இது, ஆனால் இன்றோ சிலர் பல கோடி சம்பளம் வாங்கி வருகிறார்கள்.
தென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதைய பிரம்மாண்டமான படம் என ராஜமவுலி இயக்கி வரும் 'ஆர்ஆர்ஆர்' படம் தான் அதிகம் குறிப்பிடப்படுகிறது. இப்படத்தில் ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஆலியா பட் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஹிந்தியில் முன்னணி கதாநாயகிகளாக இருப்பவர்கள் தென்னிந்திய மொழிகளில் நடிக்க அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால், ராஜமவுலி படம் என்பதால் ஆலியா பட் நடிக்க சம்மதித்தார். 'பாகுபலி' படங்கள் ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்றதே அதற்குக் காரணம்.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடிக்க பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகுதான் ஆலியா நடிக்க சம்மதித்துள்ளார். அதற்காக ஹிந்தி இயக்குனர் கரண் ஜோஹர் தான் அதிகம் பேசினார் என்கிறார்கள்.
இப்படத்தில் நடிக்க மொத்தமே 10 முதல் 15 நாட்கள் தான் ஆலியா கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். படத்தில் அவருடைய கதாபாத்திரத் தேவையும் அவ்வளவுதான் என்கிறார்கள். ஒரு நாள் சம்பளமாக ஆலியாவிற்கு 50 லட்சமும், அவருடைய உதவியாளர்களுக்காக மொத்தம் 1 லட்ச ரூபாயும் கொடுக்கப்படுகிறதாம். இவை தவிர ஹோட்டல் தங்கும் வசதி, இதரவு செலவுகள் தனியாம். எப்படியும் 10 கோடி வரை அவருக்கென மொத்த செலவு இருக்கலாம் எனத் தெரிகிறது.
ஆலியா இருப்பதால் ஹிந்தி வெளியீட்டின் வெற்றிக்கு அது உதவும் என்பதால் செலவு பற்றி கவலைப்படவில்லையாம் தயாரிப்பாளர்கள். 400 கோடி செலவில் 10 கோடி பெரிய தொகை கிடையாதே.....