நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
சமீபத்தில் சமந்தா நடித்த ‛‛தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ், ஈழத்தமிழர்களை மிகவும் மோசமாக சித்தரித்திருப்பதாக தமிழ் ரசிகர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கண்டனத்துக்கு ஆளானது. இந்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்தது குறிப்பாக இதில் நடித்த சமந்தாவும் இந்த கண்டனங்களுக்கு தப்பவில்லை.
இந்த நிலையில் பின்னணி பாடகி சின்மயி சமந்தாவின் நடிப்பை பாராட்டி, சமந்தா ஒரு ராக்ஸ்டார் என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதனால் தற்போது தமிழ் உணர்வாளர்களின் கோபம் சின்மயி மீதும் திரும்பியுள்ளது. அதைத்தொடர்ந்து அவரும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
இதையடுத்து தனது சோசியல் மீடியாவில், விரக்தி கலந்த கோபத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார் சின்மயி அதில், ”ஒருத்தரை பாராட்டி பதிவிட்டதற்காக இவ்வளவு துவேஷமா? இவ்வளவு கோபமா..? எனக்கு தெரிந்த ஒரு நபரை, நான் பலமுறை பாராட்டிய ஒரு நபரை பாராட்டுவதற்கு உரிமை இல்லையா? தயவு செய்து என்னை தனியாக விடுங்கள்.. நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்வதற்கும் ஒரு எல்லை இருக்கிறது” என்று கூறியுள்ளார் சின்மயி.