கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்க மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி |
சமீபத்தில் சமந்தா நடித்த ‛‛தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ், ஈழத்தமிழர்களை மிகவும் மோசமாக சித்தரித்திருப்பதாக தமிழ் ரசிகர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கண்டனத்துக்கு ஆளானது. இந்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்தது குறிப்பாக இதில் நடித்த சமந்தாவும் இந்த கண்டனங்களுக்கு தப்பவில்லை.
இந்த நிலையில் பின்னணி பாடகி சின்மயி சமந்தாவின் நடிப்பை பாராட்டி, சமந்தா ஒரு ராக்ஸ்டார் என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதனால் தற்போது தமிழ் உணர்வாளர்களின் கோபம் சின்மயி மீதும் திரும்பியுள்ளது. அதைத்தொடர்ந்து அவரும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
இதையடுத்து தனது சோசியல் மீடியாவில், விரக்தி கலந்த கோபத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார் சின்மயி அதில், ”ஒருத்தரை பாராட்டி பதிவிட்டதற்காக இவ்வளவு துவேஷமா? இவ்வளவு கோபமா..? எனக்கு தெரிந்த ஒரு நபரை, நான் பலமுறை பாராட்டிய ஒரு நபரை பாராட்டுவதற்கு உரிமை இல்லையா? தயவு செய்து என்னை தனியாக விடுங்கள்.. நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்வதற்கும் ஒரு எல்லை இருக்கிறது” என்று கூறியுள்ளார் சின்மயி.