பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் |
கடந்த வருடம் பரவ ஆரம்பித்த கொரோனா தாக்கம், தற்போது இரண்டாவது அலையாக உருமாறி அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது. இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் கடந்த வருடமும் சரி, இந்த வருடமும் சரி தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் ராணா, தெலங்கானாவின் வடக்கு பகுதியில் உள்ள நிர்மல் என்கிற மாவட்டத்தை சேர்ந்த 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு அவர்களுக்கு தேவையான மளிகை, உணவுப் பொருள், மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். தற்போது விராட பர்வம் என்கிற படத்தில் வனத்துறை அதிகாரியாக நடித்துள்ள ராணா, அந்த படப்பிடிப்பின்போது அந்த பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களுடன் நெருங்கி பழகியவர் என்பதால் அவர்களின் தேவையறிந்து, இந்த உதவியை செய்துள்ளார் என கூறப்படுகிறது.