நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

கடந்த வருடம் பரவ ஆரம்பித்த கொரோனா தாக்கம், தற்போது இரண்டாவது அலையாக உருமாறி அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது. இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் கடந்த வருடமும் சரி, இந்த வருடமும் சரி தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் ராணா, தெலங்கானாவின் வடக்கு பகுதியில் உள்ள நிர்மல் என்கிற மாவட்டத்தை சேர்ந்த 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு அவர்களுக்கு தேவையான மளிகை, உணவுப் பொருள், மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். தற்போது விராட பர்வம் என்கிற படத்தில் வனத்துறை அதிகாரியாக நடித்துள்ள ராணா, அந்த படப்பிடிப்பின்போது அந்த பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களுடன் நெருங்கி பழகியவர் என்பதால் அவர்களின் தேவையறிந்து, இந்த உதவியை செய்துள்ளார் என கூறப்படுகிறது.