மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கடந்த வருடம் பரவ ஆரம்பித்த கொரோனா தாக்கம், தற்போது இரண்டாவது அலையாக உருமாறி அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது. இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் கடந்த வருடமும் சரி, இந்த வருடமும் சரி தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் ராணா, தெலங்கானாவின் வடக்கு பகுதியில் உள்ள நிர்மல் என்கிற மாவட்டத்தை சேர்ந்த 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு அவர்களுக்கு தேவையான மளிகை, உணவுப் பொருள், மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். தற்போது விராட பர்வம் என்கிற படத்தில் வனத்துறை அதிகாரியாக நடித்துள்ள ராணா, அந்த படப்பிடிப்பின்போது அந்த பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களுடன் நெருங்கி பழகியவர் என்பதால் அவர்களின் தேவையறிந்து, இந்த உதவியை செய்துள்ளார் என கூறப்படுகிறது.