துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் சென்னை, தியாகராயநகர் துணை ஆணையரிடம் மோசடி புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி. பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஜீவாவின் தந்தை ஆவார். இவர் படங்களுக்கு பைனான்ஸூம் செய்து வருகிறார்.
நடிகர் விஷால் தயாரித்த சில படங்களுக்கு ஆர்.பி.சவுத்ரி நிதி உதவி செய்துள்ளார். இதற்காக ப்ரோட் நோட் பத்திரம் பெற்றுள்ளார். பணத்தை திருப்பி கொடுத்த பின்னரும் ப்ரோநோட் பத்திரத்தை தராமல் ஆர்.பி.சவுத்ரி இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விஷால் பல முறை அவரிடம் முறையிட்டும் திருப்பி தரவில்லை.
இதனால் ப்ரோநோட் பத்திரத்தை வைத்து மோசடி செய்ய திட்டமிடுவதாக கூறி சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி மீது தியாகராயநகர் துணை ஆணையரிடம் நடிகர் விஷால் புகார் அளித்துள்ளார்.