என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் தமிழில் அறிமுகமானவர் ஷெரீன். அதன்பிறகும் பல படங்களில் நடித்த அவர் பிக்பாஸ்-3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க எடுத்த அவரது முயற்சிகளில் பலன் கொடுக்கவில்லை. இருப்பினும் தனது இன்ஸ்டாகிராமில் மட்டும் அவ்வப்போது வீடியோ, போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார் ஷெரீன்.
இந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள எந்த மாதிரியான மாஸ்க் அணிய வேண்டும் என்பதை விளக்கும் வகையில் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஷெரீன்.
அந்த வீடியோவில், முதலில் மாஸ்க்கே அணியாமல் ஒரு எரியும் மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கிறார். அதன்பிறகு சர்ஜிக்கல் மாஸ்க் அணிந்து ஊதுகிறார். அப்போதும் ஒரேமுறையில் அணைந்து விடுகிறது. அதையடுத்து இரண்டு மாஸ்க் அணிந்து அந்த மெழுகுவர்த்தியை அவர் ஊதி அணைக்கும்போது பல முறை ஊதிய பிறகே அணைகிறது. ஆனால் அதன்பிறகு துணி மாஸ்க்கை அணிந்து அவர் ஊதி அணைக்கும்போது மெழுகுவர்த்தி அணியவே இல்லை. இப்படியொரு செய்முறையை செய்து காட்டி, இரட்டை மாஸ்க் மற்றும் துணி மாஸ்க்கை அணிந்து கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பதை புரிய வைத்துள்ளார் ஷெரீன்.