அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் |
மீண்டும் கோகிலா, கல்யாணராமன், கடல் மீன்கள் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். இவர் தனது இறுதி சடங்கு எப்படி நடக்க வேண்டும் என்பது குறித்து தனது மகனிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது மகனும், இயக்குனருமான ஜி.என்.குமாரவேலன் கூறியிருப்பதாவது:
அப்பாவை நேசித்தவர்கள் இத்தனை பேரா என்பதை, இன்று வரை விடாமல் அடித்துக் கொண்டிருக்கும் என் தொலைபேசி பறைசாற்றுகிறது. என் இழப்பைத் தங்கள் வீட்டு இழப்பாகக் கருதி, அப்பா இறந்த செய்தியைப் பல ஊடகங்களில் கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றி.
திட்டமிடுதல் என்பது நான் அப்பாவிடம் கற்றுக் கொண்ட ஒரு விஷயம். அது ஒரு படப்பிடிப்பாகட்டும், இல்லை தன்னுடைய இறுதி யாத்திரை ஆகட்டும், எல்லாமே அழகாக யோசித்து, நேர்த்தியாகத் திட்டமிடுவது அப்பாவின் பலம். படப்பிடிப்பை அப்பா, திட்டமிடும் விதத்தை நேரில் பார்த்துப் பிரமித்த எனக்கு, அவர் தன் இறுதி யாத்திரை எப்படி இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறியபொழுது, மகனாக நொறுங்கிப் போனேன்.
எங்கு தன்னை வைக்க வேண்டும், என்ன உடுத்த வேண்டும், வருபவர்களை எப்படி நடத்த வேண்டும், இன்னும் என்னென்னமோ சொன்னார். எனக்குத்தான் கேட்க மனதளவில் தைரியமில்லை. அவர் சொன்னது நடக்கவில்லை. அவர் விரும்பியது நடக்கவில்லை. பாழாய்ப் போன கொரோனா, உயிர்களை மட்டும் பறிக்கவில்லை, மனிதர்களின் கடைசி நிமிடங்களையும் கொன்று விடுகிறது.
தந்தையுடன் பயணித்தவர்கள், பணியாற்றியவர்கள், பழகியவர்கள் யாரையும் அவரது கடைசி முகத்தை பார்க்க முடியாமல் செய்து விட்டது கொரோனா. நேரில் வர முடியாவிட்டாலும், அப்பாவைக் கடைசியாகப் பார்க்க முடியாமல் போன அவர்கள் வலியை உணர்கிறேன். இன்பத்தில் ஒன்று கூடவும், துன்பத்தில் தோள் கொடுக்கவாவது கொரோனா ஒழிய வேண்டும். இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.