புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
விஜய் இயக்கும் தலைவி படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. பெரிய பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணவத்தும், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இந்த படத்தை அரசு எப்படி அணுகும், வெளியீட்டில் சிக்கல் வருமா? தியேட்டரில் வெளியாகுமா?, ஓடிடியில் வெளியாகுமா? என்ற விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தலைவி படத்தை முடித்த கையோடு சத்தமே இல்லாமல் ஓடிடி தளத்திற்கென்று ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ஏ.எல்.விஜய்.
இந்த படத்திற்கு அவர் அக்டோபர் 31 : லேடீஸ் நைட் என்ற டைட்டில் வைத்திருப்பதாகவும், இதனை அவரே தயாரித்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கிறது. ஒரு இரவில் நடப்பது மாதிரியான இந்த திகில் கதையில் நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு மொழியில் தயாராகி உள்ள இந்த படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியிடப்பட போகிறது என்று தெரியவில்லை. முக்கிய ஓடிடி தளத்துடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இதுபற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட இருக்கிறது.