புரோட்டா நடிகருக்கு 'ஷாக்' கொடுத்த அமரன் | 'நாயகி' ஆன பேஷன் டிசைனர் சுஷ்மா நாயர் | மன வருத்ததுடன் பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பும் ராஷி கண்ணா ; காரணம் இதுதான் | நான் விளம்பரப்படுத்தியது குட்காவை அல்ல ஏலக்காயை.. சல்மான் கான் சமாளிப்பு விளக்கம் | மிருகங்களை பலியிடாதீர்கள் ; ரசிகர்களுக்கு பாலகிருஷ்ணா வேண்டுகோள் | பிளாஷ்பேக்: ஒரே மாதிரியான கதை... வென்றவர் பி ஆர் பந்துலு... வீழ்ந்தவர் கவிஞர் கண்ணதாசன்... | பொதுவெளியில் எப்படி பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை ; விநாயகன் பளிச் | தென்னிந்திய படங்களை தவிர்ப்பது ஏன் ? மனம் திறந்த சுனில் ஷெட்டி | என்டிஆர், நீல் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்! | சித்தார்த் அப்படிப்பட்டவர் இல்லை! - கார்த்திக் ஜி கிரிஷ் |

சில ஆண்டுகளுக்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். இது நாள் வரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தொடர்ந்து சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பதிவிட்டு வருகிறார் சின்மயி. இந்நிலையில் மலையாளத்தில் ஞானபீட விருது பெற்ற கவிஞர் ஓஎன்வி குறுப்புவின் பெயரில் வழங்கப்படும் இலக்கியத்திற்கான விருது இந்தாண்டு இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் கூறுகையில், ஓ.என்.வி. ஐயா எங்களின் பெருமை. அவரின் பங்களிப்பு ஒப்பிட முடியாதது. இப்படிப்பட்ட கவுரவமான விருதை பாலியல் புகாரில் சிக்கிய ஒருவருக்கு வழங்குவது அவமரியாதையாகும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இன்ஸ்டாவில், ‛‛பதினேழுக்கும் அதிகமான புகார்கள் அவர் மீது வந்துள்ளன. இதில் பல புகார்கள் தவறானவையாக கூட இருக்கலாம். ஆனால் இங்கே அதிகாரத்தில் இருக்கும் ஒருவருடைய நற்பெயர் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறதே தவிர, அவரது மனித நேயம் அல்ல,,, கலை பெரிதா, கலைஞன் பெரிதா என என்னுடன் விவாதிக்க முற்பட்டால், மனிதநேயத்துடன் கூடிய ஒருவன் உருவாக்கும் கலை தான் சிறந்தது என்பேன். அடூர் கோபாலகிருஷ்ணனோ அல்லது விருதுக்குழு நடுவரோ யார் தீர்மானித்தது, குற்றச்சாட்டுக்கு ஆளான வைரமுத்துவுக்கு இந்த பெருமையை வழங்குவதற்கு..?” என விமர்சனத்துடன் கூடிய கேள்வியையும் எழுப்பியுள்ளார் பார்வதி.