ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சிவகுமார், சத்யராஜ், சிவகார்த்திகேயன், யோகிபாபு என பல நடிகர் நடிகைகள் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசிய வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனா விழிப்புணர்வு பற்றி பேசிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கொரோனா தொற்றை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர நாம் சின்ன சின்ன வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். தேவையில்லாமல் வெளியில் செல்லாதீர்கள். அப்படியே அவசியத்துக்காக சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்லுங்கள். அதிலும் டபுள் மாஸ்க் அணியுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். நம் முடைய தமிழ்நாடு அரசாங்கம் சொல்லும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுங்கள்.
நான் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட் டுக்கொண்டேன். நீங்களும் போட்டுக்கொள்ளுங்கள். இதனை செய்து நம்மையும் நம்மை சுற்றியிருப்பவர்களையும் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். கொரோனாவை வெல்வோம். கொரோனா இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம். நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.