2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் |
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, நிதி உதவி அளிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். ஏற்கனவே சூர்யா - கார்த்தி குடும்பத்தினர், முருகதாஸ், உதயநிதி, வெற்றிமாறன், ஜெயம் ரவி குடும்பம், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து நிதி உதவி அளித்தனர். நடிகர் அஜித் வங்கி பணபரிவர்த்தனை மூலம் நிதி உதவி வழங்கினார்.
இன்று நடிகர் ரஜினிகாந்த் தன் பங்கிற்கு ரூ.50 லட்சம் நிதியை முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் சென்று வழங்கினார். இவரை தொடர்ந்து நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். வங்கி பணபரிவர்த்தனை மூலம் இந்த தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நடிகர் விக்ரம் தற்போது அவரின் 60வது படத்தில் தனது மகன் உடன் நடித்து வருகிறார். இதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். கொரோனா காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கடந்தவாரம் தனது மகன் துருவ் உடன் சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்திவிட்டு வந்தார் நடிகர் விக்ரம்.