ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். இந்த தகவலை அவரது மகள் சவுந்தர்யா டுவிட்டரில் போட்டோ உடன் பகிர்ந்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் அதிதீவிரமாகி உள்ளது. நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தாலும் கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாகி உள்ளது. பொதுமக்கள் உடன் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசியை ஆர்வமாய் எடுத்து வருகின்றனர். ஏற்கனவே 60 வயதை கடந்த கமல், சரத்குமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். தற்போது இளம் நடிகர்களும் தடுப்பூசி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று தான் ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். இன்று(மே 12) தனது இல்லத்தில் கொரோனாவுக்கான தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். இது அவரின் இரண்டாவது கட்ட தடுப்பூசி என தெரிகிறது.
இதுப்பற்றி அவரது மகள் சவுந்தர்யா டுவிட்டரில், ‛‛நம்ம தலைவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெல்வோம். அனைவரும் மாஸ்க் அணியுங்கள், பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள்'' என பதிவிட்டுள்ளார்.