கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். இந்த தகவலை அவரது மகள் சவுந்தர்யா டுவிட்டரில் போட்டோ உடன் பகிர்ந்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் அதிதீவிரமாகி உள்ளது. நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தாலும் கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாகி உள்ளது. பொதுமக்கள் உடன் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசியை ஆர்வமாய் எடுத்து வருகின்றனர். ஏற்கனவே 60 வயதை கடந்த கமல், சரத்குமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். தற்போது இளம் நடிகர்களும் தடுப்பூசி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று தான் ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். இன்று(மே 12) தனது இல்லத்தில் கொரோனாவுக்கான தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். இது அவரின் இரண்டாவது கட்ட தடுப்பூசி என தெரிகிறது.
இதுப்பற்றி அவரது மகள் சவுந்தர்யா டுவிட்டரில், ‛‛நம்ம தலைவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெல்வோம். அனைவரும் மாஸ்க் அணியுங்கள், பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள்'' என பதிவிட்டுள்ளார்.