துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பாக கோகுல கிருஷ்ணன் மற்றும் கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து தி நைட் எனும் படத்தை தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் தயாரிக்கிறார்கள். வசனம் எழுதி இயக்குகிறார் ரங்கா புவனேஷ்வர். இவர் தமிழில் ஆறாவது வனம் மற்றும் மலையாளத்தில் சில படங்களும் இயக்கி இருக்கிறார்.
இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக விது என்கிற பாலாஜி அறிமுகமாகிறார். நாயகியாக சாக்ஷி அகர்வால் நடிக்கிறார். மேலும் மதுமிதா , ரன்வீர் குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளராக அன்வர் கான்டாரிக் அறிமுகமாகிறார்.
படம் பற்றி இயக்குனர் ரங்கா புவனேஸ்வர் கூறியதாவது: இது தமிழில் இதுவரை சொல்லமறந்த, சொல்லப்பட வேண்டிய கதையுடன் கூடிய திரைப்படம். இது காடுகள் சார்ந்த கதைக்களம் ப்ளஸ் கம்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த அனிமல் திரில்லர். பல சுவாரஸ்யமான சம்பவங்களோடு யாரும் யோசிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்தது.
கொரோனா காலகட்டத்திலும் இக்கட்டான சூழ்நிலையில் கடுமையான குளிரில் பல போராட்டமான நிகழ்வுகளோடு தொழில்நுட்பக் கலைஞர்களும், தொழிலாளர்களின் ஒத்துழைப்புடனும் இடைவிடாது 30 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளோம். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் நடைபெற உள்ளது. என்றார்.