விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை சுனாமி போன்று வேகம் எடுத்துள்ள நிலையில் திரையுலகினர் பலரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இயக்குனர் பாக்யராஜ், அவரது மனைவி பூர்ணா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுப்பற்றி பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனு டுவிட்டரில், ‛‛என் பெற்றோர் பாக்யராஜ் - பூர்ணிமாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. எங்கள் வீட்டு பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டு தனிமையில் உள்ளோம். கடந்த 10 நாட்களாக எங்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என கேட்டுக் கொள்கிறோம். இவர்கள் சீக்கிரம் குணமாக பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
இந்திய அளவில் திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் இயக்குனர் பாக்யராஜ். ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் சாந்தனு நடிகராக உள்ளார்.