புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
தமிழ்நாட்டில் புதிய அரசு இன்னும் இரண்டு நாட்களில் பதவியேற்க உள்ளது. அதற்குள்ளாக பல்வேறு துறையினரும் அவர்களது துறைக்காக பல கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். தமிழ் சினிமா துறையினர் நீண்ட நாட்களாகவே பல கோரிக்கைகளை அரசுக்கு வைத்து வருகின்றனர். அதிலும் கடந்த ஓராண்டு காலமாக கொரானோ தொற்றால் சினிமா தியேட்டர்கள் பல மாதங்களாக மூடியே இருந்தன. சில மாதங்கள் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் மூடப்பட்டுவிட்டன.
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கைளை வைத்துள்ளார்கள். அது பற்றி பேட்டியளித்த சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், “கொரானோ பிரச்சினையால் பல மாநிலங்களில், சொத்து வரி, தொழில் வரி, மின்கட்டணம் உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்துள்ளார்கள். அது போல தமிழ்நாட்டிலும் செய்தால் நன்றியுடையவர்களாக இருப்போம். மேலும், இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் 8 சதவீத உள்ளாட்சி வரி இருக்கிறது, அதையும் நீக்க வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு முன்பு பதவியில் இருந்த அரசு தியேட்டர்காரர்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. புதிதாகப் பொறுப்பேற்க உள்ள அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளார்கள்.
ஒரே நேரத்தில் தியேட்டர்காரர்களின் இத்தனை கோரிக்கைகளையும் புதிய அரசு நிறைவேற்றுமா என்பது விரைவில் தெரிய வரும்.