பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் |

கொரோனா தளர்வுகள் கடந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது இந்தியாவிலிருந்து பல சினிமா பிரபலங்கள் மாலத் தீவிற்கு தொடர்ச்சியாக சென்று வந்தார்கள். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பல சினிமா பிரபலங்கள் அங்கு சென்று வந்தார்கள். குறிப்பாக நடிகைகள் பலரும் மாலத் தீவுப் பயணத்தின் போது பலவிதமான கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு பரபரப்பூட்டினார்கள்.
நடிகை காஜல் அகர்வால் திருமணம் முடிந்து அங்கு தான் தேனிலவு சென்றார். சுமார் இரண்டு வாரங்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்து விதவிதமான புகைப்படங்களை தினமும் பதிவிட்டார். டாப்சி அவருடைய காதலருடன் சென்றார். சமந்தா, நாகசைதன்யா ஜோடி மற்றும் நடிகைகள் வேதிகா, ரகுல் ப்ரீத் சிங், ஹன்சிகா, ரைசா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் விஷ்ணு விஷால், பிக்பாஸ் ஷிவானி என பலர் அந்தப் பட்டியலில் அடக்கம்.
கடந்த வாரம் ஹிந்தி காதல் ஜோடி ஆலியா பட் - ரன்வீர் சிங், திஷதா பதானி, டைகர் ஷெராப் என பலரும் சென்றனர். தற்போது இந்தியாவிலிருந்து சுற்றுலா பயணிகள் வர மாலத் தீவு சுற்றுலாத் துறை தடை விதித்துவிட்டது. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது. ஆனால், கோவிட் காரணமாகத்தான் தடை செய்கிறோம் என குறிப்பிடவில்லை.
இத்தடை நீங்கும் வரை நமது சினிமா பிரபலங்கள் மாலத்தீவிற்கும் செல்ல முடியாது, கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட முடியாது.