தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கொரோனா தளர்வுகள் கடந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது இந்தியாவிலிருந்து பல சினிமா பிரபலங்கள் மாலத் தீவிற்கு தொடர்ச்சியாக சென்று வந்தார்கள். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பல சினிமா பிரபலங்கள் அங்கு சென்று வந்தார்கள். குறிப்பாக நடிகைகள் பலரும் மாலத் தீவுப் பயணத்தின் போது பலவிதமான கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு பரபரப்பூட்டினார்கள்.
நடிகை காஜல் அகர்வால் திருமணம் முடிந்து அங்கு தான் தேனிலவு சென்றார். சுமார் இரண்டு வாரங்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்து விதவிதமான புகைப்படங்களை தினமும் பதிவிட்டார். டாப்சி அவருடைய காதலருடன் சென்றார். சமந்தா, நாகசைதன்யா ஜோடி மற்றும் நடிகைகள் வேதிகா, ரகுல் ப்ரீத் சிங், ஹன்சிகா, ரைசா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் விஷ்ணு விஷால், பிக்பாஸ் ஷிவானி என பலர் அந்தப் பட்டியலில் அடக்கம்.
கடந்த வாரம் ஹிந்தி காதல் ஜோடி ஆலியா பட் - ரன்வீர் சிங், திஷதா பதானி, டைகர் ஷெராப் என பலரும் சென்றனர். தற்போது இந்தியாவிலிருந்து சுற்றுலா பயணிகள் வர மாலத் தீவு சுற்றுலாத் துறை தடை விதித்துவிட்டது. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது. ஆனால், கோவிட் காரணமாகத்தான் தடை செய்கிறோம் என குறிப்பிடவில்லை.
இத்தடை நீங்கும் வரை நமது சினிமா பிரபலங்கள் மாலத்தீவிற்கும் செல்ல முடியாது, கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட முடியாது.