ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
வழக்கு எண் 18, ஒரு குப்பைக் கதை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் மனிஷா யாதவ். சில ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டாலும் முழுமையாக சினிமாவை விடவில்லை. நல்ல படங்கள் வந்தால் நடிக்கவும் செய்கிறார்.
இந்நிலையில் கொரோனாவால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில், ‛‛எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமையில் உள்ளேன், ஆனால் சீக்கிரம் குணமாகிவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போதைக்கு மோசமாக இல்லை. லேசாக மூச்சுத்திணறல் மட்டும் உள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி சிகிச்சை பெறுகிறேன். இந்த நோயை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என பதிவிட்டுள்ளார் மனிஷா.