பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்களுக்கு கடந்த 10ம் தேதி முதல் 50 சதவீத அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது. நேற்று முதல் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால் தியேட்டர்களில் இரவு காட்சிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. மாலைக் காட்சிகளையும் 6 மணிக்கு முன்பாகவே ஆரம்பிக்க வேண்டிய நிலைக்கு தியேட்டர்கள் தள்ளப்பட்டன.
இந்நிலையில் தியேட்டர்களுக்கு வருவதை மக்கள் தவிர்க்க ஆரம்பித்துவிட்டனர். ஒரு சில தியேட்டர்களைத் தவிர மற்ற தியேட்டர்களில் இன்றைய காட்சிகள் எதற்கும் முன்பதிவு செய்யப்படவேயில்லை. ஒரு ஊரில் மட்டுமல்ல பல ஊர்களிலும் இதே நிலைதான்.
ஏற்கெனவே, பெரிய படங்களுக்கு மட்டுமே மக்கள் வந்து கொண்டிருந்த நிலையில் பத்து நாட்களுக்கு முன்பு வெளியான 'கர்ணன்', அதற்கு முன்பு வெளியான 'சுல்தான்' ஆகிய படங்களின் வசூல் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எப்படியும் அந்தப் படங்கள் 30 நாட்களுக்குப் பிறகு ஓடிடி தளங்களில் வந்துவிடும் என்பதால் மக்கள் தியேட்டர்களைத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.
தற்போது பரவி வரும் கொரானோ அலை எப்போது அடங்குகிறதோ அப்போதுதான் மக்கள் மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வருவார்கள் என்று அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள். கடந்த வருடம் நவம்பர் மாதம் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்ட போது என்ன நிலைமை இருந்ததோ அதே நிலைமை தற்போது வந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.