பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை | சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? | 'ஹீரோ மெட்டீரியல்' இல்லை என்ற கேள்வி... : அமைதியாக பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் | ஒரே நாளில் இளையராஜாவின் இரண்டு படங்கள் இசை வெளியீடு | நான் அவள் இல்லை : வித்தியாசமான கதாபாத்திரத்தில் நிகிலா விமல் | 27 வருடங்களுக்குப் பிறகு நாகார்ஜூனாவுடன் இணையும் தபு | பல்டி பட ஹீரோவின் படத்திற்கு சென்சாரில் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய படக்குழு |
நடிப்பதற்கு கையில் படம் இல்லை என்றாலும் மீடியாக்களின் கவனத்தை திருப்ப அடிக்கடி எதையாவது செய்கிறவர் நடிகர் மன்சூரலிகான். சில நேரங்களில் அது அவருக்கு ஆபத்தாக முடியும்.
அப்படித்தான் நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது மருத்துவமனை வாசலில் நின்று கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், தடுப்பூசியையும் விவேக்கின் உடல் நலனையும் ஒப்பிட்டும், கொரோனா இந்தியாவிலேயே இல்லை, அரசு ஏமாற்றுகிறது என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அளித்த புகாரின் பேரில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், தூண்டிவிடுதல், தொற்றுப்பரவல் தடைச் சட்டத்தை மீறுதல், சமூக வலைதளங்கள், காட்சி ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்புதல், பொதுமக்களைத் தூண்டிவிடுதல், தொற்றுநோய் தடுப்புச் சட்டம்,பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் வழக்கு பதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மன்சூரலிகான் கைது செய்யப்படுவார் என்றும், ஜாமீனில் வெளிவர முடியாது என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில் முன்ஜாமீன் கேட்டு மன்சூரலிகான் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.