அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால்.. அந்த வருடத்திலேயே பில்லா-2 படத்திலும் அஜித்துக்கு வில்லனாக நடித்தார். பின் சூர்யாவுக்கு நண்பனாக அஞ்சான் படத்தில் நடித்தார். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்த சக்தி என்கிற படத்தில் அறிமுகமான வித்யுத் ஜாம்வால், தனது திரையுலக பயணத்தில் பத்து வருடங்களை கடந்துவிட்டார்.
தற்போது திரையுலகில் தனது அடுத்த கட்ட நகர்வாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் வித்யுத் ஜாம்வால். ஆக்சன் ஹீரோ பிலிம் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ள இவர், தயாரிப்பாளரும் தனது நண்பருமான அப்பாஸ் சய்யத் என்பவருடன் இணைந்து படங்களை தயாரிக்க உள்ளார். இதுபற்றி வித்யுத் ஜாம்வால் கூறும்போது, “சினிமாவில் பத்து வருடங்கள் என்கிற மைல்கல்லை கடந்துவிட்டேன்.. இந்த தருணத்தில் தயாரிப்பு நிறுவனம் துவங்குவதை உங்களிடம் பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறேன்” என கூறியுள்ளார்.