ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால்.. அந்த வருடத்திலேயே பில்லா-2 படத்திலும் அஜித்துக்கு வில்லனாக நடித்தார். பின் சூர்யாவுக்கு நண்பனாக அஞ்சான் படத்தில் நடித்தார். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்த சக்தி என்கிற படத்தில் அறிமுகமான வித்யுத் ஜாம்வால், தனது திரையுலக பயணத்தில் பத்து வருடங்களை கடந்துவிட்டார்.
தற்போது திரையுலகில் தனது அடுத்த கட்ட நகர்வாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் வித்யுத் ஜாம்வால். ஆக்சன் ஹீரோ பிலிம் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ள இவர், தயாரிப்பாளரும் தனது நண்பருமான அப்பாஸ் சய்யத் என்பவருடன் இணைந்து படங்களை தயாரிக்க உள்ளார். இதுபற்றி வித்யுத் ஜாம்வால் கூறும்போது, “சினிமாவில் பத்து வருடங்கள் என்கிற மைல்கல்லை கடந்துவிட்டேன்.. இந்த தருணத்தில் தயாரிப்பு நிறுவனம் துவங்குவதை உங்களிடம் பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறேன்” என கூறியுள்ளார்.