‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கொரானோவின் அடுத்த அலை முன்பைக் காட்டிலும் தீவிரமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
தனுஷ் நடித்த 'கர்ணன்' படம் இரண்டாவது நாளிலிருந்து அந்த கட்டுப்பாட்டில்தான் திரையிடப்பட்டு வருகிறது. இருந்தாலும் படம் வியாபார ரீதியாக லாபத்தைப் பார்த்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
வரும் ஏப்ரல் 23ம் தேதி 'எம்ஜிஆர் மகன்', மே 13ம் தேதி 'டாக்டர்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் விரைவில் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
அந்தக் காட்டுப்பாடுகளில் தியேட்டர்களுக்கான கட்டுப்பாடுகளிலும் புதிய மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள். ஒருவேளை வார இறுதி நாட்களில் தியேட்டர்களை முழுமையாக மூட அரசு உத்தரவிட்டால் மேலே சொன்ன புதிய படங்களின் வெளியீட்டைத் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.
மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களில்தான் தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்த தினங்களில் தியேட்டர்கள் இல்லையென்றால் புதிய படங்களை வெளியிட்டு வசூலைப் பெறுவது கடினம். கொரானோ பரவல் கட்டுப்படுத்தப்படும் வரை மேலும் சில படங்களின் வெளியீடுகளும் தள்ளிப் போகலாம் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.