'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
சின்னக்கலைவாணர் என எல்லோராலும் அழைக்கப்படும் நடிகர் விவேக், யாரும் எதிர்பாராத விதமாக நேற்று(ஏப்., 17) காலமானார். அவருக்கு திரையுலகினரும், ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். கொரோனா காலம் என்பதையும் தாண்டி பலர் அவருக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். அவரின் இறுதிஊர்வலத்தின் போது வழிநெடுக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று அரசு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை இன்று(ஏப்., 18) சந்தித்தனர். விவேக்கின் மனைவி அருள்செல்வி, மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி, மைத்துனர் செல்வகுமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.
விவேக்கின் மனைவி அருள்செல்வி கூறுகையில், ‛‛எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய, மாநில அரசுக்கு நன்றி. அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி. இறுதி வரை உடன் இருந்த காவல்துறைக்கும், ஊடக்கத்துறைக்கும் நன்றி. இறுதி அஞ்சலியில் பங்கு பெற்ற கோடான கோடி ரசிகர்கர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.