நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... |

சின்னக்கலைவாணர் என எல்லோராலும் அழைக்கப்படும் நடிகர் விவேக், யாரும் எதிர்பாராத விதமாக நேற்று(ஏப்., 17) காலமானார். அவருக்கு திரையுலகினரும், ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். கொரோனா காலம் என்பதையும் தாண்டி பலர் அவருக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். அவரின் இறுதிஊர்வலத்தின் போது வழிநெடுக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று அரசு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை இன்று(ஏப்., 18) சந்தித்தனர். விவேக்கின் மனைவி அருள்செல்வி, மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி, மைத்துனர் செல்வகுமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.
விவேக்கின் மனைவி அருள்செல்வி கூறுகையில், ‛‛எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய, மாநில அரசுக்கு நன்றி. அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி. இறுதி வரை உடன் இருந்த காவல்துறைக்கும், ஊடக்கத்துறைக்கும் நன்றி. இறுதி அஞ்சலியில் பங்கு பெற்ற கோடான கோடி ரசிகர்கர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.