‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
சின்னக்கலைவாணர் என எல்லோராலும் அழைக்கப்படும் நடிகர் விவேக், யாரும் எதிர்பாராத விதமாக நேற்று(ஏப்., 17) காலமானார். அவருக்கு திரையுலகினரும், ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். கொரோனா காலம் என்பதையும் தாண்டி பலர் அவருக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். அவரின் இறுதிஊர்வலத்தின் போது வழிநெடுக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று அரசு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை இன்று(ஏப்., 18) சந்தித்தனர். விவேக்கின் மனைவி அருள்செல்வி, மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி, மைத்துனர் செல்வகுமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.
விவேக்கின் மனைவி அருள்செல்வி கூறுகையில், ‛‛எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய, மாநில அரசுக்கு நன்றி. அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி. இறுதி வரை உடன் இருந்த காவல்துறைக்கும், ஊடக்கத்துறைக்கும் நன்றி. இறுதி அஞ்சலியில் பங்கு பெற்ற கோடான கோடி ரசிகர்கர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.