மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு-2 என பல படங்களில் நாயகியாக நடித்தவர் நிக்கி கல்ராணி. ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தன்னிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்து விட்டதாக பெங்களூர் அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் இவர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், கோரமங்களா பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் நிகில். இவரது ஓட்டலில் 2016ம் ஆண்டு ரூ. 50 லட்சம் முதலீடு செய்தேன். அதற்காக அவர் எனக்கு மாதந்தோறும் ரூ. 1 லட்சம் தருவதாக கூறியிருந்தார். ஆனால் அவர் இப்போதுவரை மாதந்தோறும் ஒரு லட்சம் தரவில்லை. நான் கொடுத்த ரூ. 50 லட்சத்தையும் திருப்பித்தர மறுக்கிறார். அதனால் அவர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார் நிக்கி கல்ராணி. இந்த புகாரின் அடிப்படையில் ஓட்டல் உரிமையாளர் நிகிலிடம் அம்ருதஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.