புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பத்து வருடங்களுக்கு முன்பு எங்கேயும் எப்போதும் என்கிற படத்தின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ராஜாராணி, மான் கராத்தே என தொடர்ந்து வெற்றி படங்களாக தயாரித்து வந்தார். இடையில் சில காலம் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் ஓம் பிரகாஷ் பட் என்பவருடன் இணைந்து தயாரிக்க உள்ளாராம்.
இதற்கான முன் கட்ட தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை யார் இயக்குகிறார், யார் நடிக்கிறார்கள் என்கிற தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த படத்திற்கு 1947 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அனேகமாக இது சுதந்திர போராட்டத்தை மையப்படுத்திய வரலாற்று படமாகவோ அல்லது அதன் பின்னணியில் சமகாலத்தில் உருவாகும் சமூக படமாகவோ இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் உருவாக உள்ளது.