பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பத்து வருடங்களுக்கு முன்பு எங்கேயும் எப்போதும் என்கிற படத்தின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ராஜாராணி, மான் கராத்தே என தொடர்ந்து வெற்றி படங்களாக தயாரித்து வந்தார். இடையில் சில காலம் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் ஓம் பிரகாஷ் பட் என்பவருடன் இணைந்து தயாரிக்க உள்ளாராம்.
இதற்கான முன் கட்ட தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை யார் இயக்குகிறார், யார் நடிக்கிறார்கள் என்கிற தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த படத்திற்கு 1947 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அனேகமாக இது சுதந்திர போராட்டத்தை மையப்படுத்திய வரலாற்று படமாகவோ அல்லது அதன் பின்னணியில் சமகாலத்தில் உருவாகும் சமூக படமாகவோ இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் உருவாக உள்ளது.