பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
பத்து வருடங்களுக்கு முன்பு எங்கேயும் எப்போதும் என்கிற படத்தின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ராஜாராணி, மான் கராத்தே என தொடர்ந்து வெற்றி படங்களாக தயாரித்து வந்தார். இடையில் சில காலம் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் ஓம் பிரகாஷ் பட் என்பவருடன் இணைந்து தயாரிக்க உள்ளாராம்.
இதற்கான முன் கட்ட தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை யார் இயக்குகிறார், யார் நடிக்கிறார்கள் என்கிற தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த படத்திற்கு 1947 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அனேகமாக இது சுதந்திர போராட்டத்தை மையப்படுத்திய வரலாற்று படமாகவோ அல்லது அதன் பின்னணியில் சமகாலத்தில் உருவாகும் சமூக படமாகவோ இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் உருவாக உள்ளது.