என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
காமெடி நடிகர் செந்தில் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் செந்தில். நடிகர் கவுண்டமணி உடன் இவர் நடித்த பல காமெடிகள் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்து கொண்டிருக்கின்றன. தற்போது ஒரு படத்தில் கதையின் நாயகானாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக பா.ஜ., கட்சியில் சேர்ந்த செந்தில், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூன்று தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.