வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

காமெடி நடிகர் செந்தில் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் செந்தில். நடிகர் கவுண்டமணி உடன் இவர் நடித்த பல காமெடிகள் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்து கொண்டிருக்கின்றன. தற்போது ஒரு படத்தில் கதையின் நாயகானாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக பா.ஜ., கட்சியில் சேர்ந்த செந்தில், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூன்று தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.