இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு சில பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து தனது புதிய படத்தை இயக்க ஷங்கர் தயாராகிக் கொண்டிருக்கிறார். தில்ராஜூ தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் தயாராகிறது.
இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகரும், ராம்சரணின் தந்தையுமான சிரஞ்சீவியும் நடிப்பதாக சமீபத்தில் செய்தி வெளியான நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் சல்மான்கானும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக இன்னொரு செய்தி வெளியாகியுள்ளது.
அதோடு, ஐந்து மொழிகளில் இப்படம் உருவாவதால், அந்தந்த மொழிகளைச் சேர்ந்த மேலும் சில பிரபல நடிகர்களையும் இந்த படத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தையிலும் ஷங்கர் தற்போது ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.