நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
சென்னை: ராஜா தயாரித்து, இயக்கி நடித்துள்ள, மாவீரன் பிள்ளை படம் வாயிலாக, மறைந்த சந்தன வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி, நடிகையாக அறிமுகமாகிறார். பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்றுவிப்பவராக அவர் நடித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி: இது, ஜாதி சம்பந்தப்பட்ட படம் அல்ல. கூத்து கலைஞர்கள், போலி காதல், மது விலக்கு, விவசாயம் உள்ளிட்ட பல விஷயங்களை, இப்படத்தில் பேசியுள்ளோம். அப்பாவின் கதைக்கும், மாவீரன் பிள்ளை படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது படம் வர வேண்டும் என்று நினைத்தேன். அதனால், அவரது, கெட்டப்பில் உள்ள என் படம், போஸ்டரில் வந்தது.
அப்பாவின் கதையை படமாக்க முடிந்தால், நிச்சயம் செய்வேன். இதற்காக, அம்மாவிடம் உரிய அனுமதியும் பெறுவேன். அப்பாவின் உண்மையான கதை, இன்னும் படமாக்கப்படவில்லை. நாளிதழ்களில் வந்த செய்தியை வைத்து தான், வீரப்பனின் வாழ்க்கை கதையை, படம் எடுத்துள்ளனர். அப்பா புதைத்து வைத்த பணம், காட்டில் இருக்கிறது; ஆனால், இப்போது அது செல்லாது. எங்கு இருக்கிறது என்றும் யாருக்கும் தெரியாது. அது, அப்பாவுக்கும், அவருடன் இருந்த கோவிந்தனுக்கும் மட்டுமே தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.