அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
முன்னணி நடிகரான பவன் கல்யாணை வைத்து படம் தயாரிக்க நீ, நான் என பட நிறுவனங்கள் வரிசையில் நிற்கின்றன. இருந்தாலும் தனக்கென பவன் கல்யாண் கிரியேடிவ் ஒர்க்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இரண்டு படங்களையும் தயாரித்தார் பவன் கல்யாண். திறமையுள்ளவர்களை அடையாளப்படுத்துவதற்காகவே இந்த நிறுவனத்தை துவங்கிய அவர், 2018-க்கு பிறகு படத்தயாரிப்பில் இறங்கவில்லை.
இந்தநிலையில் தற்போது பீப்பிள் மீடியா பேக்டரி என்கிற நிறுவனத்துடன் இணைந்து 15 படங்களை தயாரிக்க உள்ளார் பவன் கல்யாண். இதுகுறித்த அறிவிப்பை அந்த நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இளைஞர்களின் மனதில் உதிக்கும் உண்மையான படைப்புகளை சினிமாவில் கொண்டுவருவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் தான், தாங்கள் இருவரும் இணைந்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.