ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
முன்னணி நடிகரான பவன் கல்யாணை வைத்து படம் தயாரிக்க நீ, நான் என பட நிறுவனங்கள் வரிசையில் நிற்கின்றன. இருந்தாலும் தனக்கென பவன் கல்யாண் கிரியேடிவ் ஒர்க்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இரண்டு படங்களையும் தயாரித்தார் பவன் கல்யாண். திறமையுள்ளவர்களை அடையாளப்படுத்துவதற்காகவே இந்த நிறுவனத்தை துவங்கிய அவர், 2018-க்கு பிறகு படத்தயாரிப்பில் இறங்கவில்லை.
இந்தநிலையில் தற்போது பீப்பிள் மீடியா பேக்டரி என்கிற நிறுவனத்துடன் இணைந்து 15 படங்களை தயாரிக்க உள்ளார் பவன் கல்யாண். இதுகுறித்த அறிவிப்பை அந்த நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இளைஞர்களின் மனதில் உதிக்கும் உண்மையான படைப்புகளை சினிமாவில் கொண்டுவருவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் தான், தாங்கள் இருவரும் இணைந்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.