100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான 'திரிஷ்யம்' படத்தில் மோகன்லாலின் இளைய மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அனில். பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும் நடித்தார். தற்போது வெளியான த்ரிஷயம்-2வில் நன்கு வளர்ந்த இளம்பெண்ணாக காட்சியளிக்கும் இவர், கதாநாயகியாகவும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சோஷியல் மீடியா பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.
சமீபத்தில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட தனது இரண்டு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார் எஸ்தர் அனில். அதுபற்றி அவர் கூறும்போது, இதில் ஒன்று ஹோட்டல் அறையில் உள்ள செயற்கை வெளிச்சத்தில் எடுக்கப்பட்டது. என் சருமம் எவ்வளவு பளபளப்பாக இருக்கிறது பார்த்தீர்களா..? இன்னொரு புகைப்படம் இயற்கையான சூரிய வெளிச்சத்தில் எடுக்கப்பட்டது. ஆனால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் எல்லாம் தெரிகின்றன. அதனால் சோஷியல் மீடியாக்களில் பலர் வெளியிடும் படங்களை பார்த்து அப்படியே உண்மை என நம்ப வேண்டாம்” என கூறியுள்ளார் எஸ்தர் அனில்.