ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக அவரது மருமகனான தனுசுக்கு அசுரன் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 67ஆவது தேசிய விருது வழங்கும் விழா மே மாதம் 3ஆம் தேதி வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். அதோடு, தேசிய விருது வழங்கப்படும் அன்றைய தினமே ரஜினிகாந்துக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அந்த வகையில் ரஜினி, தனுஷ் இருவருக்கும் ஒரே நாளில் விருது வழங்கப்பட உள்ளது. அதிலும் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த இரண்டு பேர் ஒரே நாளில் உயரிய விருதுகளை பெறப்போகிறார்கள்.




