துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் போனி கபூர் தயாரித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இவர்கள் மூவரும் சேர்ந்துள்ள படம் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. பிரமாண்டமான ஆக்ஷன் காட்சியை ஸ்பெயின் நாட்டில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இது நிறைவடைந்த பின்னர் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
வலிமை படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். வலிமை அப்டேட் கேட்டு அவர்கள் பலரையும் தொந்தரவு செய்தது சர்ச்சையானது. இதையடுத்து அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி அப்டேட் வெளியாகும் போனி கபூர் அறிவித்ததால் அஜித் ரசிகர்கள் சற்று அமைதியாகினர்.
இந்நிலையில் வலிமை குறித்த புதிய அப்டேட் ஒன்றை போனி கபூர் வெளியிட்டுள்ளார். அதில், "வலிமை படத்தின் தமிழக திரையரங்கு உரிமை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்", என அவர் குறிப்பிட்டுள்ளார். படம் நிறைவடையும் முன்பே திரையரங்கு உரிமை வியாபாரமாகிவிட்டதால் தயாரிப்பாளர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.