'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
2011ல் பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், ஜி.எம்.குமார் ஜனனி அய்யர், மது ஷாலினி உள்பட பலர் நடித்த படம் ‛அவன் இவன். இப்படம் வெளியானபோது சிங்கம்பட்டி ஜமீனை தரக்குறைவாக விமர்சனம் செய்து படமாக்கப்பட்டிருப்பதாக எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தன. அதையடுத்து சிங்கம்பட்டி ஜமீன் முருகேச தீர்த்தபதியின் மகன் சங்கர் ஆத்மஜன் என்பவர் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் டைரக்டர் பாலா, நடிகர் ஆர்யா இருவர் மீதும் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக பாலா, ஆர்யாவிற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் குறித்த நாளில் ஆர்யா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதையடுத்து தான் படப்பிடிப்பில் இருந்ததால் ஆஜராக முடியவில்லை என்று ஆர்யா தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில்,நேற்று அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரான ஆர்யாவிடம் மன்னிப்பு கேட்டால் வழக்கு வாபஸ் பெறப்படும் என்று ஜமீன் தரப்பு கேட்டுக்கொண்டதை அடுத்து நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார் ஆர்யா. அதையடுத்து ஆர்யா மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சிங்கம்பட்டி ஜமீனை ஒரு காமெடியனைப் போன்று சித்தரித்திருந்ததால் டைரக்டர் பாலா மீதான வழக்கை வாபஸ் பெறமாட்டோம் என்று ஜமீன் தரப்பு கூறிவிட்டது. அதனால் பாலா மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற உள்ளது.