கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் கடந்த நான்கு மாதங்களில் வெளியான 50க்கும் மேற்பட்ட படங்களில் ஓடிய ஒரே படம் 'மாஸ்டர்'. அப்படத்திற்கு மட்டுமே ரசிகர்கள் பழையபடி திரண்டு வந்தனர்.
அதற்கு முன்பும், பின்பும் வெளிவந்த பல படங்கள் சில நாட்களில் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டன. மக்கள் இன்னமும் தியேட்டர்கள் பக்கம் வருவதற்கு யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் கொரானோ தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
அதனால், மக்கள் வருவார்களா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் 'காட்சிங்ல்லா Vs காங்' படத்திற்கு ஓரளவிற்கு மக்கள் தியேட்டர்கள் பக்கம் வர ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்த பெரிய படமாக அடுத்த வாரம் கார்த்தி, ராஷ்மிகா மற்றும் பலர் நடித்துள்ள 'சுல்தான்' படம் வெளிவர உள்ளது. படத்தைத் தியேட்டர்களில் மட்டுமே வெளியிடப் போகிறோம் என ஏற்கெனவே அதன் தயாரிப்பாளர் அறிவித்துவிட்டார்.
இந்தப் படத்தை தியேட்டர்காரர்களும் அதிகமாக நம்பியுள்ளனர். திரையுலகில் விசாரித்த போது படமும் நன்றாக வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். 'மாஸ்டர்' படம் ஒரு மாற்றத்தைக் கொடுத்ததைப் போல 'சுல்தான்' படமும் கொடுக்கும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.