ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | ஆஸ்கர் விருது: ஆறு தமிழ் படங்கள் உட்பட 29 இந்திய படங்கள் பரிந்துரை | 'புஷ்பா 2' ரிலீஸ், மீண்டும் உறுதி செய்த படக்குழு | பிளாஷ்பேக் : 10 வேடங்களில் நடித்த முதல் நடிகர் | ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி |
தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகரான நாகார்ஜூனா, தற்போது பிரவீன் சத்தாரு இயக்கும் தனது 97ஆவது படத்தில் நடிக்க தயாராகி விட்டார். அதையடுத்து 98ஆவது படத்தையும் இந்த ஆண்டிற்குள் முடித்து விட திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 99ஆவது படத்தில் நடிப்பவர் அதை முடித்ததும் தனது 100ஆவது படத்தில் நடிக்கப்போகிறார்.
இந்த படத்தை தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து லூசிபர் ரீமேக் படத்தை இயக்கவிருக்கும் மோகன்ராஜா இயக்குகிறார். ஏற்கனவே மனம் என்ற படத்தில் மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ், அவரது மகனான நாகார்ஜூனா, பேரன்களான நாகசைதன்யா ஆகியோர் நடித்தது போன்று இப்படமும் ஒரு மல்டி ஸ்டார் கதையில் உருவாகிறது.
அப்பா - மகன் கதையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜூனாவும், அகிலும் நடிக்க, நாகசைதன்யா இன்னொரு வேடத்தில் நடிக்கிறாராம். குறிப்பாக, மனம் படத்தில் நாகசைதன்யா படம் முழுக்க வந்தது போன்று இப்படத்தில் அகில் நடிக்கிறாராம். இப்படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்து, நடிக்கப் போகிறார் நாகார்ஜூனா.