39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு |
கார்த்தி - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 2-ந்தேதி தியேட்டரில் வெளியாகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில், ‛‛கொரோனா லாக்டவுன் காரணமாக சுல்தான் படத்தை ஓடிடி தளத்தில்தான் வெளியிட முடிவு செய்து வந்தோம். அந்த சமயத்தில் தான் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி வசூல் சாதனை புரிந்தது.
அதன்பிறகுதான் சுல்தான் படத்தை தியேட்டரில் வெளியிட்டாலும் மாஸ்டர் படத்தைப்போலவே வசூவலிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு ஓடிடி தளத்தில் வெளியிடும் முடிவை மாற்றிக்கொண்டோம். அந்த வகையில் சுல்தான் படத்தை தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என்கிற உறுதியை எங்களுக்கு ஏற்படுத்தியதே விஜய்யின் மாஸ்டர் படம்தான் என்றார் எஸ்.ஆர்.பிரபு.