கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
கார்த்தி - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 2-ந்தேதி தியேட்டரில் வெளியாகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில், ‛‛கொரோனா லாக்டவுன் காரணமாக சுல்தான் படத்தை ஓடிடி தளத்தில்தான் வெளியிட முடிவு செய்து வந்தோம். அந்த சமயத்தில் தான் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி வசூல் சாதனை புரிந்தது.
அதன்பிறகுதான் சுல்தான் படத்தை தியேட்டரில் வெளியிட்டாலும் மாஸ்டர் படத்தைப்போலவே வசூவலிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு ஓடிடி தளத்தில் வெளியிடும் முடிவை மாற்றிக்கொண்டோம். அந்த வகையில் சுல்தான் படத்தை தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என்கிற உறுதியை எங்களுக்கு ஏற்படுத்தியதே விஜய்யின் மாஸ்டர் படம்தான் என்றார் எஸ்.ஆர்.பிரபு.