த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதைக்கு நம்பர் 1 நடிகர் என்றால் அது பிரபாஸ் தான். ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்டோரின் சம்பளத்தை அவர் கடந்துவிட்டார். 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து முடித்துள்ள பிரபாஸ், தற்போது 'ஆதி புருஷ், சலார்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதற்குப் பிறகு 'மகாநடி' இயக்குனர் நாக் அஷ்வின் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
அதற்கடுத்து 2023ம் ஆண்டில் 'சலார்' படத்தை இயக்கி வரும் 'கேஜிஎப்' இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை பிரபல தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளாராம்.
சில வருடங்களுக்கு முன்பே பெரிய தொகை ஒன்றை அவர் பிரபாஸிடம் அட்வான்ஸாக கொடுத்திருந்தாராம். சரியான இயக்குனர் கிடைக்காத காரணத்தால் அப்படம் தள்ளிக் கொண்டே வந்ததாம். இப்போது பிரஷாந்த் நீல் தான் சரியான இயக்குனர் என பிரபாஸ் முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
அந்தப் படமும் மற்ற படங்களைப் போல 'பான் இந்தியா' படமாகத்தான் உருவாகப் போகிறதாம்.