சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா'. ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
படத்தில் வில்லனாக நடிக்க தமிழ் நடிகரான விஜய் சேதுபதியைக் கேட்டுள்ளார்கள். இப்படத்தில் தமிழர்களைப் பற்றி தவறாக சித்தரிக்கப்படுவதாகவும், அதனால்தான் விஜய் சேதுபதி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்றும் ஒரு தகவல் வெளியாகியது.
தற்போது அவருக்குப் பதிலாக மலையாள நடிகர் பஹத் பாசிலை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். ஏற்கெனவே இந்தப் படத்தில் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், ஆதி, தனஞ்செயா உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்போது, பஹத்தும் வந்துள்ளதால் நட்சத்திரங்களைப் பொறுத்தவரையில் இப்படம் மேலும் பிரம்மாண்டமாகி உள்ளது.
அல்லு அர்ஜுனுக்கு ஏற்கெனவே கேரளாவில் தனி மார்க்கட் உண்டு. தற்போது பஹத்தும் நடிப்பதால் மலையாளத்தில் இப்படத்திற்கு மேலும் வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள். ஐந்து மொழிகளில் தயாராகி வரும் இப்படம் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியாக உள்ளது.




