2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை | கவின் ஜோடியாக பிரியங்கா மோகன், கொஞ்சம் ஆச்சரியம்தான்… | குட் பேட் அக்லி : 'ஓஎஸ்டி' விரைவில் ரிலீஸ் | 15 நாளில் எடுக்கப்பட்ட வெப்சீரிஸ் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் மீண்டும் ரஜினியை சந்தித்த நடிகர் தேவன் | 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‛புலி முருகன்' இயக்குனருடன் கைகோர்த்த பிரித்விராஜ் | ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் 'தக் லைப்'!! | கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா'. ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
படத்தில் வில்லனாக நடிக்க தமிழ் நடிகரான விஜய் சேதுபதியைக் கேட்டுள்ளார்கள். இப்படத்தில் தமிழர்களைப் பற்றி தவறாக சித்தரிக்கப்படுவதாகவும், அதனால்தான் விஜய் சேதுபதி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்றும் ஒரு தகவல் வெளியாகியது.
தற்போது அவருக்குப் பதிலாக மலையாள நடிகர் பஹத் பாசிலை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். ஏற்கெனவே இந்தப் படத்தில் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், ஆதி, தனஞ்செயா உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்போது, பஹத்தும் வந்துள்ளதால் நட்சத்திரங்களைப் பொறுத்தவரையில் இப்படம் மேலும் பிரம்மாண்டமாகி உள்ளது.
அல்லு அர்ஜுனுக்கு ஏற்கெனவே கேரளாவில் தனி மார்க்கட் உண்டு. தற்போது பஹத்தும் நடிப்பதால் மலையாளத்தில் இப்படத்திற்கு மேலும் வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள். ஐந்து மொழிகளில் தயாராகி வரும் இப்படம் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியாக உள்ளது.