பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை |
தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் பான் இந்தியா படம் புஷ்பா. இந்த படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதியைத் தான் அணுகினர். ஆனால் அவர் கால்சீட் பிரச்சினை காரணமாக அப்படத்தில் நடிக்கவில்லை. அதையடுத்து ஆர்யாவிடம் பேசினர், அவரும் மறுத்துவிட்டார்.
அவரைத் தொடர்ந்து தற்போது பிரபல மலையாள நடிகர் பஹத் பாசிலை இப்படத்தில் வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளனர். ஏற்கனவே தமிழ், மலையாளத்திலும் ஓரளவுக்கு ரசிகர்களை அல்லு அர்ஜூன் வைத்திருக்கும் நிலையில இப்போது பஹத் பாசிலும் இணைந்திருப்பதால் தென்னிந்தியாவில் புஷ்பா பெரிய அளவில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இப்படத்தை சுகுமார் இயக்குகிறார். ஆகஸ்ட் 13ல் புஷ்பா திரைக்கு வருகிறது.