பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் பான் இந்தியா படம் புஷ்பா. இந்த படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதியைத் தான் அணுகினர். ஆனால் அவர் கால்சீட் பிரச்சினை காரணமாக அப்படத்தில் நடிக்கவில்லை. அதையடுத்து ஆர்யாவிடம் பேசினர், அவரும் மறுத்துவிட்டார்.
அவரைத் தொடர்ந்து தற்போது பிரபல மலையாள நடிகர் பஹத் பாசிலை இப்படத்தில் வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளனர். ஏற்கனவே தமிழ், மலையாளத்திலும் ஓரளவுக்கு ரசிகர்களை அல்லு அர்ஜூன் வைத்திருக்கும் நிலையில இப்போது பஹத் பாசிலும் இணைந்திருப்பதால் தென்னிந்தியாவில் புஷ்பா பெரிய அளவில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இப்படத்தை சுகுமார் இயக்குகிறார். ஆகஸ்ட் 13ல் புஷ்பா திரைக்கு வருகிறது.