ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தென்னிந்திய சினிமா வரலாற்றில் மகத்தான வசூல் சாதனை படைத்த படம் பாகுபலி ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்கள். உலகம் முழுக்க வெளியாகி வசூலை குவித்தது. இரண்டு பாகங்களின் கதைப்படி எல்லாமே நிறைவடைந்து விட்டது. இதனால் 3ம் பாகத்துக்கான ஸ்கோப் இல்லை என்ற கூறப்பட்டு வந்தது. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் 3ம் பாகம் இயக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அறிவித்து விட்டார்.
இந்த நிலையில் பாகுபலியின் 3ம் பாகத்தை தயாரிக்க கார்பரேட் ஓடிடி தளம் ஒன்று முன்வந்திருக்கிறது. இதற்காக அது 200 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்க தயாராக இருப்பதாக இயக்குனர் ராஜமவுலியிடம் பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளது. 9 எபிசோட்களை கொண்ட தொடரா இதனை தயாரிக்க அந்த நிறுவனம் விரும்புகிறது. இதற்கு ராஜமவுலி ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.
தற்போது ஆர்ஆர்ஆர் படத்தில் பிசியாக இருக்கும் ராஜமவுலி அந்த பணிகளை முடித்து விட்டு இதில் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.