பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? |
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வெற்றி மாறன் -தனுஷ் கூட்டணி இணைந்த நான்கு படங்களுமே வெற்றிப் படங்களாகவே அமைந்தன. இந்நிலையில் வட சென்னை படம் வெளியான நேரத்தில் வடசென்னை-2 உருவாகும் என்று தெரிவித்திருந்தார் வெற்றிமாறன். ஆனால் மூன்று வருடங்களை கடந்து விட்ட நிலையில் அப்படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. காரணம் தனுஷ், வெற்றிமாறன் இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய வெற்றிமாறன், ''வடசென்னை- 2 இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து உருவாக வாய்ப்புள்ளது. வட சென்னையை விட இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாக இருப்பதாக'' தெரிவித்துள்ளார்.
தற்போது சூரியை வைத்து ஒரு படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குகிறார். இதன்பிறகே தனுஷின் வடசென்னை-2 படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என தெரிகிறது.