நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

2005ல் பி.வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு என பலர் நடித்து வெளியான பிளாக்பஸ்டர் படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு பி.வாசு தயாரானபோது அதில் நடிக்க ரஜினி விரும்பவில்லை. அதன்காரணமாக ரஜினிக்கான அந்த கதையில் ராகவா லாரன்சை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தார். கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே சந்திரமுகி-2 உருவாக இருப்பது போன்று பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அதையடுத்து அப்படம் குறித்த பேச்சே இல்லாததோடு, ராகவா லாரன்சும் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார்.
இதனால் சந்திரமுகி-2 படம் கைவிடப்பட்டு விட்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் அதுகுறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், சந்திரமுகி-2 படம் கைவிடப்படவில்லை. தற்போது நான் நடித்து வரும் ருத்ரன் முடிந்ததும் சந்திரமுகி-2 படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று தெரிவித்து அப்படம் குறித்து பரவி வரும் வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.