நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டியின்றி தலைவராக பாரதிராஜா முயற்சித்தார். அது நடக்காததால் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற போட்டி சங்கத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கினார்.
நிர்வாகிகள் இன்றி தனி அதிகாரியால் நிர்வகிக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு தலைவராக முரளி ராமசாமி வெற்றி பெற்றார். பெரும்பாலான பொறுப்புக்கு அவரது அணியினர் வந்தனர்.
ஒரே ஒரு தயாரிப்பாளர் சங்கம் தான் இருக்க வேண்டும். நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பவர்கள் தாய் சங்கத்தில் வந்து சேருமாறு புதிய நிர்வாகம் அழைப்பு விடுத்தது. இதனை நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பாரதிராஜா சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது தாய் சங்கம். கொரோனா பரவல் நேரத்தில் பாரதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை தொடங்கினார். தற்போது தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட தாய் சங்க நிர்வாகம் செயல்படுகிறது. இதில் உறுப்பினராக இருந்து கொண்டு போட்டியாக சங்கம் நடத்துவது முறையல்ல. எனவே பாரதிராஜா தவிர்த்து நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். விளக்கம் பெற்ற பிறகு சங்க விதியின்படி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது குறித்து முடிவு செய்யப்படும். என்றார்.