புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டியின்றி தலைவராக பாரதிராஜா முயற்சித்தார். அது நடக்காததால் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற போட்டி சங்கத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கினார்.
நிர்வாகிகள் இன்றி தனி அதிகாரியால் நிர்வகிக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு தலைவராக முரளி ராமசாமி வெற்றி பெற்றார். பெரும்பாலான பொறுப்புக்கு அவரது அணியினர் வந்தனர்.
ஒரே ஒரு தயாரிப்பாளர் சங்கம் தான் இருக்க வேண்டும். நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பவர்கள் தாய் சங்கத்தில் வந்து சேருமாறு புதிய நிர்வாகம் அழைப்பு விடுத்தது. இதனை நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பாரதிராஜா சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது தாய் சங்கம். கொரோனா பரவல் நேரத்தில் பாரதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை தொடங்கினார். தற்போது தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட தாய் சங்க நிர்வாகம் செயல்படுகிறது. இதில் உறுப்பினராக இருந்து கொண்டு போட்டியாக சங்கம் நடத்துவது முறையல்ல. எனவே பாரதிராஜா தவிர்த்து நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். விளக்கம் பெற்ற பிறகு சங்க விதியின்படி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது குறித்து முடிவு செய்யப்படும். என்றார்.