புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் |
திரையுலகம் கொரானோ தாக்கத்தில் இருந்து தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஒரு சில முன்னணி நடிகர்களின் படங்களுக்குக் கூட கூட்டம் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மார்ச் மாதத்தில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வந்தால் மக்களை மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வரவழைத்து விடலாம் என்ற ஆர்வத்தில் திரையுலகினர் இருந்தார்கள். ஆனால், ஏப்ரல் 6ம் தேதி தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பு முன்னர் திட்டமிட்ட புதிய படங்களின் வெளியீடுகளை மாற்றும் எனத் தெரிகிறது.
மார்ச் மாதக் கடைசி வாரத்தில் கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருக்கும். அந்த சமயத்தில் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவது சந்தேகம்தான். மேலும், திரைப்பட போஸ்டர்களை ஒட்ட சுவர்கள் கூட கிடைக்காது, அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.
எனவே, மார்ச் 26ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'டாக்டர்', ஏப்ரல் 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'கர்ணன்' ஆகிய படங்களின் வெளியீட்டில் மாற்றங்கள் வரலாம் எனச் சொல்கிறார்கள்.