கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
புச்சி பாபு இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் அறிமுக நடிகர்கள் வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி நடித்து தெலுங்கில் வெளியான படம் 'உப்பெனா'. படத்தில் நாயகன், நாயகி அளவிற்கு படத்தின் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படம் இது.
இப்படத்தைப் பற்றி விமர்சகர்களும், தெலுங்குத் திரையுலகத்தின் பல பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். அனைவரும் மறக்காமல் தமிழ் நடிகரான விஜய் சேதுபதியைப் பற்றியும் குறிப்பிடுவார்கள். ஆனால், நேற்று இப்படத்தைப் பற்றிப் பாராட்டி டுவீட் செய்த நடிகர் மகேஷ் பாபு, விஜய் சேதுபதி பற்றி எதுவுமே சொல்லவில்லை. வேண்டுமென்றே விஜய் சேதுபதியைப் பற்றி குறிப்பிடாமல் விட்டாரா அல்லது மறந்துவிட்டாரா என்று தெரியவில்லை. கமெண்ட்டுகளில் ரசிகர்கள் அது பற்றி கேட்டதற்கும் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
“உப்பெனா, ஒரு வார்த்தையில்..கிளாசிக். இயக்குனர் புச்சிபாபு, நீங்கள் காலத்தால் மறக்க முடியாத ஒரு படத்தைக் கொடுத்துவிட்டீர்கள், உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். உப்பெனா படத்தின் இதயம் தேவிஸ்ரீபிரசாத். சிறந்த இசைக்காக இந்தப் படம் நினைவு கூறப்படும். டிஎஸ்பி இதுவரையிலான உங்களின் சிறந்த படம் இது.
இரண்டு புதுமுகங்கள், மிகச் சிறந்த நடிப்பை வழங்குவது இதயத்தைத் தூண்டுகிறது. வைஷ்ணவ், கிரித்தி நீங்கள் இருவரும் ஸ்டார். கடைசியாக, இயக்குனர் சுகுமார், மைத்திரி நிறுவனம் ஆகியோருக்கு இப்படத்திற்குப் பின்னணியாக இருந்ததற்கு நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.
எல்லாரையும் பாராட்டியவர் விஜய் சேதுபதியை மறந்தது ஏனோ ?.